tamilnadu

img

உத்தரபிரதேசம்: கடும் வெப்பத்தால் காசியாத்திரை சென்ற 4 தமிழர்கள் மரணம்

கோவையில் இருந்து  காசியாத்திரை சென்ற 4 தமிழர்கள் உத்திரபிரதேச மாநிலம் ஜான்சி அருகே கடும் வெப்பம் காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 
கோவையில் இருந்து சுமார் 68 பேர் காசியாத்திரை சென்றுள்ளனர். இந்நிலையில் அவர்கள் நேற்று மாலை சுவாமி தரிசனத்தை முடித்து  கேரள எக்ஸ்பிரஸ் ரயிலில் ஊர் திரும்பினர். இதையடுத்து உத்திரபிரதேச மாநிலம் ஜான்சி அருகே ரயில் சென்று கொண்டிருந்தபோது கடும் வெப்பம் மற்றும் அனல் காற்றால் 4 பேர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் பழனிச்சாமி, தனலட்சுமி, பாலகிருஷ்ணன் சுப்பையா ஆகிய நால்வரும் கடும் வெப்பத்தால் உடலில் நீர்சத்து பாதிப்பு ஏற்பட்டதால் உயிரிழந்து விட்டனர் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் ஒருவர் நீர்சத்து குறைவு காரணமாக ஜான்சி மருத்துவமனையில் தீவிர சிகிக்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.